இன்று அதிகாலை பப்புவா நியூ கினியா தீவுதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பசிபிக் கடல் பகுதியில், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே, பப்புவா நியூ கினியா நாடு அமைந்துள்ளது. இன்று காலை 3 மணி அளவில் அங்குள்ள காகோலாம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்த மக்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், எத்தனை பேர் புதைந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மண்ணில் புதைந்தவர்களை சடலங்களாக மீட்டெடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் கண்ணீருடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.