ஆழ்கடலில் 19000 க்கும் மேற்பட்ட எரிமலைகள் - ரேடார் சாட்டிலைட் தரவுகள் மூலம்கண்டுபிடிப்பு

அதிக திறன் வாய்ந்த ரேடார் சாட்டிலைட்டுகள் மூலம், பூமியின் கடல் பகுதி கண்காணிக்கப்பட்டு, ஆழ் கடலில் 19000 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 6 ம் தேதி வெளியான எர்த் அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் ஆய்வு இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. “செயற்கைக்கோள் அளித்த தகவல்கள் அடிப்படையில், இதுவரை 19325 புதிய ஆழ்கடல் எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2500 மீட்டர் உயரம் உள்ள சிறிய எரிமலைகள், நவீன தொழில்நுட்பம் மூலம் […]

அதிக திறன் வாய்ந்த ரேடார் சாட்டிலைட்டுகள் மூலம், பூமியின் கடல் பகுதி கண்காணிக்கப்பட்டு, ஆழ் கடலில் 19000 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 6 ம் தேதி வெளியான எர்த் அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் ஆய்வு இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

“செயற்கைக்கோள் அளித்த தகவல்கள் அடிப்படையில், இதுவரை 19325 புதிய ஆழ்கடல் எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2500 மீட்டர் உயரம் உள்ள சிறிய எரிமலைகள், நவீன தொழில்நுட்பம் மூலம் சிறிய அளவில் தோற்றமளிக்கும் படி படம் பிடிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பூமியில் உள்ள ஆழ்கடல் பகுதிகள், இன்னும் மனிதனால் அறியப்படாத பேருலகமாக உள்ளது. ரேடார் சாட்டிலைட் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது” என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu