சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, எத்தியோப்பியா நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான அகதிகள் வருகை தருகின்றனர். கடந்த ஜூன் 6ஆம் தேதி நிலவரப்படி, எத்தியோப்பியா வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 41200 ஐ தாண்டி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 700 முதல் 1000 பேர் எத்தியோப்பியா வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பு படையினரும் நடத்திய தாக்குதல்களில், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 1.6 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.