சாவில்ஸ் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டில், டேட்டா சென்டர் அமைப்பதற்காக கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 45% மும்பையிலும், 26% ஹைதராபாத்திலும், 14% புனேயிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2022 ல், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களின் திறன் 900 MW ஆக உயர்ந்துள்ளது. மேலும், டேட்டா சென்டர்களுக்கான ஆக்கிரமிப்பு இடம் 9 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில், 150 MW திறன் அளவில் டேட்டா சென்டர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் 60 சதவீதமும் சென்னையில் 30 சதவீதமும் டேட்டா சென்டர் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 4 - 5 ஆண்டுகளில், 20 மில்லியன் சதுர அடி அளவில், இந்தியாவின் இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு நகரங்கள் உட்பட, அனைத்து முக்கிய நகரங்களிலும் டேட்டா சென்டர்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்று கருதுவதாக சாவில்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.