டேட்டா சென்டர் அமைப்பதற்காக 500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

January 19, 2023

சாவில்ஸ் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டில், டேட்டா சென்டர் அமைப்பதற்காக கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 45% மும்பையிலும், 26% ஹைதராபாத்திலும், 14% புனேயிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், 2022 ல், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களின் திறன் 900 MW ஆக உயர்ந்துள்ளது. மேலும், டேட்டா சென்டர்களுக்கான ஆக்கிரமிப்பு இடம் 9 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில், 150 […]

சாவில்ஸ் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டில், டேட்டா சென்டர் அமைப்பதற்காக கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 45% மும்பையிலும், 26% ஹைதராபாத்திலும், 14% புனேயிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2022 ல், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களின் திறன் 900 MW ஆக உயர்ந்துள்ளது. மேலும், டேட்டா சென்டர்களுக்கான ஆக்கிரமிப்பு இடம் 9 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில், 150 MW திறன் அளவில் டேட்டா சென்டர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் 60 சதவீதமும் சென்னையில் 30 சதவீதமும் டேட்டா சென்டர் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 4 - 5 ஆண்டுகளில், 20 மில்லியன் சதுர அடி அளவில், இந்தியாவின் இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு நகரங்கள் உட்பட, அனைத்து முக்கிய நகரங்களிலும் டேட்டா சென்டர்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்று கருதுவதாக சாவில்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu