நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக 500க்கும் மேற்பட்ட ஓபன் ஏஐ ஊழியர்கள் கடிதம்

November 22, 2023

ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்டோர், நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக மிரட்டல் கடிதம் விடுத்துள்ளனர். நிறுவனத்தில் உள்ள தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகாவிட்டால், அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அனைவரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சாம் அல்ட்மேன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்ற போவதாக கூறியுள்ளனர்.ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றும் 700க்கும் மேற்பட்ட மொத்த ஊழியர்களில், […]

ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்டோர், நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக மிரட்டல் கடிதம் விடுத்துள்ளனர். நிறுவனத்தில் உள்ள தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகாவிட்டால், அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அனைவரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சாம் அல்ட்மேன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்ற போவதாக கூறியுள்ளனர்.ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றும் 700க்கும் மேற்பட்ட மொத்த ஊழியர்களில், 500க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக கூறியுள்ளனர். ‘எந்த காரணங்களுக்காக சாம் அல்ட்மேன், கிரேக் ப்ரோக்மான் ஆகியோர் நீக்கப்பட்டார்களோ, அதுவே நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை கூறுகிறது’ என ஊழியர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான மீரா மூராத்தி, இலியா சுட்ஸ்கவர், பிராட் லைட்கேப் ஆகியோரும் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் தொடர்பாக ஓபன் ஏஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu