வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முா்மு

January 11, 2023

வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 17-ஆவது வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முா்மு கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். அவா்கள் தனித்துவ இடத்தையும் பெற்றுள்ளனா். கலை, இலக்கியம், அரசியல், தொழில்துறை, கல்வி கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ்கின்றனா். […]

வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 17-ஆவது வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முா்மு கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். அவா்கள் தனித்துவ இடத்தையும் பெற்றுள்ளனா். கலை, இலக்கியம், அரசியல், தொழில்துறை, கல்வி கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ்கின்றனா்.

நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஏற்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் தங்கள் பங்களிப்பை அதிக அளவில் அளிக்கவேண்டும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu