ஜனாதிபதி திரவுபதி முர்மு 53 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார்.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம் உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட 50 பேருக்கு கடந்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ளவர்களுக்கு பத்ம விருதுகளை புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை, அவரது மகன் அகிலேஷ் யாதவ் பெற்றார். ஓ.ஆர்.எஸ்.,சை கண்டுபிடித்த மறைந்த மருத்துவ பேராசிரியர் திலீப் மஹலானாபிசுக்கான விருதை, அவரது உறவினர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார். இந்தியாவிற்கான முதல் ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, பாலிவுட் நடிகர் ரவீணா டாண்டன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.