லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததில் ஏற்பட்ட பேரழிவு, உலகையே உலுக்கியுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதல் எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில் சக்திவாய்ந்த வெடிபொருளான PETN பொருள் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த PETN வெடிபொருள், இராணுவ மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான வெடிபொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேஜர்கள் எவ்வாறு வெடிக்க வைக்கப்பட்டன என்பது குறித்த துல்லியமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இவற்றை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி வெடிக்க வைத்திருக்கலாம். அதாவது, ஒரே நேரத்தில் அனைத்து பேஜர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.