இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவிய 7 பேர் சுட்டுக்கொலை

February 7, 2025

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. இந்திய ராணுவத்திற்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில், கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இந்திய ராணுவத்தின் சிறப்புக் குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது, ஊடுருவ முயற்சித்தவர்களை கண்டறிந்த ராணுவத்தினர் அவர்களை நிறுத்த முயன்றனர். இந்தச் சூழ்நிலையில், இந்திய […]

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. இந்திய ராணுவத்திற்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில், கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இந்திய ராணுவத்தின் சிறப்புக் குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது, ஊடுருவ முயற்சித்தவர்களை கண்டறிந்த ராணுவத்தினர் அவர்களை நிறுத்த முயன்றனர்.

இந்தச் சூழ்நிலையில், இந்திய ராணுவத்திற்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஏழு ஊடுருவல்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர், இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்டவர்களில் 2 முதல் 3 பேர் பாகிஸ்தான் எல்லை ஆக்சன் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் கடுமையாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu