பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் புத்தாண்டை வரவேற்க திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற வரும் போரில், எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 9000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 21000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் போரில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் துயரத்தில் பங்கு கொள்ளும் விதத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.