பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவி காலத்திற்கு வரம்பு நிர்ணயிக்கும் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் தலைமை நீதிபதிகளின் பதவி காலத்திற்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிர்ணயிக்கும் சட்டம் அந்நாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட சிறப்பு குழு தலைமை நீதிபதியை நியமிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த சட்டத்திற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதையும் மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.