மசூத் அசார் உறவினர்கள் கொல்லப்பட்ட அதிரடி தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை அவசரமாக மூடியது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேர் மற்றும் அவரின் நெருங்கிய கூட்டாளிகள் 4 பேர் என மொத்தம் 14 பேரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை அவசரமாக மூடியது. குறிப்பாக, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் வான்வெளியை மூடியதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், கராச்சி விமான நிலையம் இயல்பானபடி செயல்பட்டு வருகிறது.