பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் துணை ராணுவப் படை

June 24, 2024

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவ படைகளை நிறுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் வணிகர்கள் குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதிக மின்சார கட்டணம் வசூலிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களுக்காக அது நடைபெற்றது. அதில் பொதுமக்கள் பங்கேற்றனார். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் காவல்துறை அதிகாரி உட்பட சிலர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவ படைகளை நிறுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் வணிகர்கள் குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதிக மின்சார கட்டணம் வசூலிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களுக்காக அது நடைபெற்றது. அதில் பொதுமக்கள் பங்கேற்றனார். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் காவல்துறை அதிகாரி உட்பட சிலர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைப்பிரிவுகளை அந்நாட்டு அரசு களம் இறக்கியது. அதேபோல் பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்து பிராந்திய பிரதமர் அன்வர் உலஹக் மற்றும் உள்நாட்டு அமைச்சர் நக்வி ஆகியோர் ஆலோசனை செய்தனர். அப்பொழுது அங்கு மூன்று மாத காலத்திற்கு துணை ராணுவ படையின் 6 பிரிவுகளின் நிலை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. மங்களா, ஜீலம் மற்றும் குல்பர் நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையுடன் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu