பாகிஸ்தான் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனையடுத்து நவாஸ் ஷரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்துள்ளது. சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 21 பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் இடங்களுக்கு மறு தேர்தல் நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ், பாகிஸ்தான் டெரிக் ஈ இன்சாம் ஆதரவு பெற்ற சன்னி இட்டேஹாத் கவுன்சில், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதனடிப்படையில் நவாஸ் ஷெரீப் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி, சன்னி இட்டேஹாத் கவுன்சில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாகாணங்களுக்கான உறுப்பினரில் 16 இடங்களில் 10 -ல் நவாஸ் ஷெரீப் கட்சி பெற்றி பெற்றுள்ளது.