இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு

April 2, 2024

தோஷகாணா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகாணா எனப்படும் இந்த வழக்கில் அவருக்கும், அவருடைய மனைவி புஷ்ரா பீவிக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் அவர்கள் சிறை தண்டனையை […]

தோஷகாணா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகாணா எனப்படும் இந்த வழக்கில் அவருக்கும், அவருடைய மனைவி புஷ்ரா பீவிக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் அவர்கள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நேற்று தலைமை நீதிபதி அமீர் பாரூக் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில்லை.

ஏனெனில் அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் மற்ற வழக்குகளிலும் அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu