பாகிஸ்தான் இந்திய ராணுவ இணையதளங்களை இலக்காகக் கொண்டு சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் பகுதியில் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் உயரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் இந்திய ராணுவ இணையதளங்களை இலக்காகக் கொண்டு சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு துறையினர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.