ராவல்பிண்டியில் தோல்வியடைந்த 13 வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக அந்நகர ஆணையர் தியாகத் அலி சத்தா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி ராவல்பிண்டி நகர ஆணையர் பதவி விலகி உள்ளார். இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த உயர்நிலைக் குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் பங்கேற்பது குறித்து பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ராவல்பிண்டியில் தோல்வியடைந்த 13 வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக அந்நகர ஆணையர் தியாகத் அலி சத்தா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவை மாற்றி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா மற்றும் தலைமை நீதிபதி காசி பையஸ் ஈசா ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையத்தின் தாமதம் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த சூழலில் லியாகத் அலியின் குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உயர்நிலைக் குழுவை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.