பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க எதிா்க்கட்சிகளுக்கு நவாஸ் அழைப்பு

February 10, 2024

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். அவர் நாகூர் நகரில் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்த முடியாது. பொது தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உள்ளது. எனவே பாகிஸ்தானை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு […]

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் நாகூர் நகரில் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்த முடியாது. பொது தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உள்ளது. எனவே பாகிஸ்தானை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க முன்வர வேண்டும் என்றார்.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பாகிஸ்தானில் ஸ்திரத்தின்மை நிலவ வேண்டும். இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை வளர்க்க வேண்டும் என்றார். முன்னதாக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று கூறினார் தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த கூட்டணி ஆட்சிக்கு இம்ரான் கானின் கட்சி விருப்பம் தெரிவிக்கவில்லை. தனித்து ஆட்சி அமைக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu