தோஷக்கானா வழக்கில் இம்ரான்கானுக்கு ஜாமீன்

November 21, 2024

தோஷக்கானா வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி 'சிபர்' வழக்கில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 2023 ஜனவரி 30-ஆம் தேதி, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது. மேலும், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததற்கும், பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததற்கும் தொடர்புடைய வழக்குகளில் அவர் மற்றும் […]

தோஷக்கானா வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி 'சிபர்' வழக்கில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 2023 ஜனவரி 30-ஆம் தேதி, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது. மேலும், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததற்கும், பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததற்கும் தொடர்புடைய வழக்குகளில் அவர் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 மற்றும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கான் ஜாமீனுக்காக மேல்முறையீடு செய்ததில், இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu