பாகிஸ்தான் பொது தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. தெரிக் இ இன்ஷாப் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது சொந்த ஊரான மியான்வாலி தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் மீது அரசு ரகசியங்களை கசிய விட்டது உட்பட ஊழல் வழக்கு மற்றும் பல்வேறு குற்றசாட்டுகள் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.