பாகிஸ்தான் தனது ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகங்களின் தகவலின்படி, பாகிஸ்தான் தனது ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
ஃபதே ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், விரைவாக ஏவ முடியும். இதன் முக்கிய அம்சமாக, இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு தனது ஏவுகணையை சோதிப்பது முதல் முறை அல்ல. சமீபத்தில், பாகிஸ்தான் 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணையை சோதித்திருந்தது.