பிணைத்தொகை அடிப்படையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், அவரின் மனைவி புஷ்ரா பீவி 'தோஷகானா' ஊழல் வழக்கில், கடந்த ஜனவரி 31-ல் கைது செய்யப்பட்டார். இம்முறை, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீவிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புஷ்ரா பீவியின் வழக்கில் ஜாமீன் கோரிக்கையை முன் வைத்து இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகை அடிப்படையில் புஷ்ரா பீவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.