பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் எட்டு நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
அவை ரேஷாம் என்ற பெண் பெயரில் வந்துள்ளன. இந்த கடிதங்களில் தலைமை நீதிபதி உட்பட ஒவ்வொரு நீதிபதியையும் குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது/ கடிதத்தின் வெளியே வெள்ளை நிறத்தில் ரசாயன பொருள் தடவப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த கடிதங்களை திறக்க வேண்டாம் என்று நீதிபதிகளின் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் அந்த எட்டு கடிதங்களையும் பறிமுதல் செய்தனர். எனினும் நான்கு கடிதங்கள் முன்பே திறக்கப்பட்டன. அதில் தெஹ்ரீக் நமூஸ் ஈ பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அந்த்ராக்ஸ் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வகை ரசாயன பொடியானது உடனடியாக உடலில் பரவி விடும் அபாயம் கொண்டது. இது விஷத்தன்மை கொண்டது.
சமீபத்தில் இந்த எட்டு நீதிபதி நீதிபதிகளில் ஆறு நீதிபதிகள் தங்களுக்கு நெருக்கடி தரும் வகையில் அவ்வப்போது அச்சுறுத்தல் வருகிறது என்று தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை நீதிபதி காஜி பயஸ் ஈஷா இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற குழுவின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் ஷெபாஸ் ஷெரிபயும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது இந்த சம்பவம் குறித்து ஏழு பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொள்ள உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.