அண்மையில், பயங்கரவாதிகள் சிலர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு காவல் நிலையம் ஒன்றை கைப்பற்றி, பணியில் இருந்த 8 காவலர்களை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்திருந்தனர். ஆனால், சிறப்பு அதிரடி தனிப்படையின் துணையுடன், பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சிறை பிடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 33 பயங்கரவாதிகளை காவல்துறையினர் விசாரணை கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர், காவல் ஆய்வாளரை கல்லால் தாக்கி, துப்பாக்கியை கைப்பற்ற முயன்றார். இதனால், கைது செய்யப்பட்ட 33 பேரையும் காவல்துறையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இந்த தீவிரவாதிகள், தாலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.