பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானை மேலும் இரு வழக்கில் கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிபர் இம்ரான் கான் தனது பதவி காலத்தின் போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டார். அதனால் ரகசிய காப்புறுதியை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பரிசு பொருள் முறைகேடு மற்றும் அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு ஆகிய இரண்டு வழக்குகளில் இவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெளியிட்டது. இந்த உத்தரவு அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.