பாகிஸ்தான் - இம்ரான் கானுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவு

July 12, 2023

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் மீது தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவரால் ஜாமீனில் வெளிவர முடியாத படி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையத்தை இம்ரான் கான் மற்றும் அவர் கட்சியை சேர்ந்த பாவத் சவுத்ரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிறகு அவர் மீது 150 […]

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் மீது தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவரால் ஜாமீனில் வெளிவர முடியாத படி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையத்தை இம்ரான் கான் மற்றும் அவர் கட்சியை சேர்ந்த பாவத் சவுத்ரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிறகு அவர் மீது 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவற்றில் ஜாமீன் கிடைத்தாலும், இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத படி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu