ஜனாதிபதி ஜோ பிடன் ஜனநாயக காங்கிரஸ் பிரச்சாரக் குழு வரவேற்புறையில் பேசியபோது, எந்த காரணமும் இல்லாமல் அணு ஆயுதங்களை ஏந்துவதால் பாகிஸ்தானை ஒரு ஆபத்தான நாடு என்று கூறினார். F-16 கப்பற்படையில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பிறகு பிடனின் இந்த கருத்து வெளிப்பட்டது கவனிக்கத்தக்கது.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிடன், ரஷ்யா - உக்ரைன் மோதல் உலக அளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும், மற்ற நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள் குறித்தும் க௫த்துக்கள் ௯றினார். அதே ௯ட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், இராணுவத் தளவாடங்களை யாருக்கு வழங்குவது என்று முடிவு செய்வது வாஷிங்டனின் கடமை என்றார். மேலும் அதனை பெறும் நாட்டிற்கு தளவாடங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் பொறுப்பு உள்ளதாக பிளிங்கன் ௯றினார்.
இதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் குறித்தும், ஒப்பந்தத்தின் உள்நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அதையடுத்து பாகிஸ்தானுடனான எஃப்-16 ஒப்பந்தம் தொடர்பான கேள்வியை பிளிங்கன் முன் வைத்தார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்தியா கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று கடிந்தது. அத்துடன் இந்தியா தனது இராஜதந்திர நடத்தை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் உலகளாவிய நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) கிரேய் லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. அதாவது பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவிச் சட்டங்களான FATF விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால், ஜூன் 2018 முதல் பாகிஸ்தான் 'சாம்பல் நிறப் பட்டியலில்' சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார் பிடன்.
சீனாவுடனான தனது நெ௫க்கமான உறவைப் பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஷி ஜின்பிங்குடன் ஈடுபடும் பணியை தனக்கு ஒதுக்கியதாகக் ஜோ பிடன் கூறினார். பின்னர் ஜின்பிங்கைப் பற்றி பிடன் கூறுகையில், “ ஜின்பிங் தான் விரும்புவதைப் புரிந்துகொள்கிறார், இ௫ப்பினும் மிகப்பெரிய சிக்கல்களைக் எதிர்கொள்கிறார் என்று குறிப்பிட்டார்.