சர்வதேச நாணய நிதியம் கைவிட்டதால், சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்

May 16, 2023

பாகிஸ்தான் நாடு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது. நாட்டின் நிதி நிலையை சீரமைக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், சர்வதேச நாணய நிதியம் முன் வைத்த ஒழுங்கு முறைகளுக்கு பாகிஸ்தான் இணங்காததால், பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதாக இருந்த நிதியை சர்வதேச நாணய நிதியம் தாமதப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டில் உள்ள 220 மில்லியன் மக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பாகிஸ்தானின் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க, அந்நாடு சீனாவிடம் உதவி கோரலாம் என தகவல் […]

பாகிஸ்தான் நாடு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது. நாட்டின் நிதி நிலையை சீரமைக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், சர்வதேச நாணய நிதியம் முன் வைத்த ஒழுங்கு முறைகளுக்கு பாகிஸ்தான் இணங்காததால், பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதாக இருந்த நிதியை சர்வதேச நாணய நிதியம் தாமதப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டில் உள்ள 220 மில்லியன் மக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

பாகிஸ்தானின் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க, அந்நாடு சீனாவிடம் உதவி கோரலாம் என தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, சீனா, பாகிஸ்தானின் நிதி நிலையை சீரமைக்க உதவ தயார் நிலையில் உள்ளதாக சீனா தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் உதவிகள் பெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சீனாவிடம் இருந்து ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கு கூடுதலாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu