உள்நாட்டு ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை வெற்றி

November 5, 2024

பாகிஸ்தான் கடற்படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை நிலம் மற்றும் கடல் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். மேம்பட்ட வழிகாட்டி அமைப்புடன், இது திசை மற்றும் வேகத்தை மாற்றும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தலைமைத் தளபதி நவீத் அஷ்ரஃப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் வெற்றிக்கு பாகிஸ்தான் அதிபா் […]

பாகிஸ்தான் கடற்படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்த ஏவுகணை நிலம் மற்றும் கடல் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். மேம்பட்ட வழிகாட்டி அமைப்புடன், இது திசை மற்றும் வேகத்தை மாற்றும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தலைமைத் தளபதி நவீத் அஷ்ரஃப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் வெற்றிக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோர் கடற்படை மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu