பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, அங்கு, ‘எரிசக்தி பாதுகாப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 8:30 மணிக்கு, சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா முஹம்மது ஆசிப் தெரிவித்துள்ளார். மேலும், திருமண மண்டபங்கள், உணவகங்கள் ஆகியவற்றை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிடப்படுவதாக அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் குல்தாம் தஸ்தகிர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், அதிக அளவிலான எரிசக்தி சேமிக்கப்படுவதுடன், எண்ணெய் இறக்குமதிக்கான செலவினங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் இந்த அறிவிப்புக்கு வணிக வளாக உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.