பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடி காரணமாக தனக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறியுள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிலிருந்து கடன்களை வாங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு இதன் காரணமாக தனக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இதன் சோதனை முயற்சியாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்டேட் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.