பாகிஸ்தான் - பெட்ரோல் பங்குகள் மூடல் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

February 10, 2023

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அங்கு பெட்ரோல் விநியோகம் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விநியோகத்தை முறையாக வழங்காததற்காக எண்ணை நிறுவனங்கள் மீது பாகிஸ்தானிய பெட்ரோல் டீலர்கள் அசோசியேஷன் குற்றம் சாட்டி வருகிறது. அதே வேளையில், குறிப்பிட்ட சில பங்கு உரிமையாளர்கள், பெட்ரோலை பதுக்கி வைத்துக் கொண்டு நெருக்கடியை வேண்டுமென்றே ஏற்படுத்துவதாகவும் […]

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அங்கு பெட்ரோல் விநியோகம் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விநியோகத்தை முறையாக வழங்காததற்காக எண்ணை நிறுவனங்கள் மீது பாகிஸ்தானிய பெட்ரோல் டீலர்கள் அசோசியேஷன் குற்றம் சாட்டி வருகிறது. அதே வேளையில், குறிப்பிட்ட சில பங்கு உரிமையாளர்கள், பெட்ரோலை பதுக்கி வைத்துக் கொண்டு நெருக்கடியை வேண்டுமென்றே ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் பதுக்கி வைத்தவர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி வெளியாகி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu