பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

July 20, 2024

அல்கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கானை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைது செய்தனர். பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்பின் மூத்த தலைவரான அமின் முகமது ஷாம் கானை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். இவர் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்றவை நடைபெறுகிறது. இதனால் சட்டம் […]

அல்கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கானை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்பின் மூத்த தலைவரான அமின் முகமது ஷாம் கானை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். இவர் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்றவை நடைபெறுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே பயங்கரவாதத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அல்கொய்தா அமைப்பினர் பதவியேற்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு பெரும் தாக்குதலை நிகழ்த்த சதி திட்டம் தீட்டுவதாகவும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஜெல்லம் நகரில் ராணுவ வீரர்கள் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீர் முகமது கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 64. அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu