பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தளபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த புதன்கிழமை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி உள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை கண்டுபிடித்தனர். இருதரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாத தளபதி இர்ஃபான் உல்லா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது, இர்ஃபான் உல்லா பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவராக சொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே, திங்கட்கிழமை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.