ஈரான் எரிவாயு திட்டத்துக்கு அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து விலக்கு பெற உள்ளதாக பாகிஸ்தான் பெட்ரோலியதுறை மந்திரி முஸாதிக் மாலிக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஈரானில் இருந்து மலிவான விலையில் எரிவாயு இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் முதலில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் இடையே எரிவாயு குழாய் திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியா அதனை பின்பு நிராகரித்துவிட்டது. அதனால் அது ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான திட்டமாக இருந்து வந்தது. இந்த திட்டத்திற்காக 1150 கிலோமீட்டர் நீளமுள்ள எரிவாயு குழாய் இரு நாடுகளுக்கு இடையே பொருத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆகையால் பாகிஸ்தான் இந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து விலக்கு பெற உள்ளதாக பாகிஸ்தான் பெட்ரோலியதுறை மந்திரி முஸாதிக் மாலிக் கூறியுள்ளார்.