குஜராத்தின் ஜகாவ் கடற்கரையில் இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானிய படகு பிடிபட்டது.
குஜராத்தின் ஜகாவ் கடற்கரையில் கடலோரக் காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டி௫ந்தனர். அச்சமயம் 33 கடல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகான அல் தயாசா பிடிபட்டது. அதை சோதனையிட்டதில் ரூபாய் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 40 கிலோ போதைப்பொருள் இ௫ப்பது தெரிந்தது. பின்னர் விசாரணைக்காக படகுடன் ஆறு பணியாளர்கள் ஜகாவ்விற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதேபோல் 2021 அக்டோபர் இல், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.