பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு தாக்குதல் - 42 பேர் பலி

November 23, 2024

பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதல் 42 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று கார் மற்றும் பேருந்தில் பிரசினர் நகரிலிருந்து பெஷாவர் நகருக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது குரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் அவர்களின் பயணத்தினை இடைமறித்தது. பின்னர், அந்த கும்பல் துப்பாக்கிகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு […]

பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதல் 42 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று கார் மற்றும் பேருந்தில் பிரசினர் நகரிலிருந்து பெஷாவர் நகருக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது குரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் அவர்களின் பயணத்தினை இடைமறித்தது. பின்னர், அந்த கும்பல் துப்பாக்கிகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினரானது தெரியவந்துள்ளது. தாக்குதல் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu