பாகிஸ்தானில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் மக்கள், சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் சேமித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் உள்ள மக்கள், சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் அடைத்து எடுத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
எரிவாயு விற்பனையாளர்கள், கம்ப்ரசர் மூலம் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயுவை நிரப்பி, வால்வு உதவியுடன் அதனை மூடி, பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள், மின்சார உறிஞ்சும் பம்ப் உதவியுடன் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். மூன்று முதல் நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப ஒரு மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத மக்கள், இவ்வாறு எரிவாயு பயன்பாட்டிற்கு மாறி உள்ளனர்.