இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலக்கோட் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.