உளவு பணிக்காக இந்தியாவில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஊடுருவல் 

December 26, 2022

இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள், உளவு பணிக்காக பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பஞ்சாபின் அமிர்தரசஸ் நகரருகே எல்லையொட்டிய பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியது. இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். சமீப காலங்களாக இந்திய வான்வெளிக்குள் இதுபோன்ற அத்துமீறி ஊடுருவும் முயற்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியே இந்த ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் டிசம்பர் முதல் வாரத்தில் இதுவரை 16 […]

இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள், உளவு பணிக்காக பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

பஞ்சாபின் அமிர்தரசஸ் நகரருகே எல்லையொட்டிய பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியது. இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். சமீப காலங்களாக இந்திய வான்வெளிக்குள் இதுபோன்ற அத்துமீறி ஊடுருவும் முயற்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியே இந்த ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் டிசம்பர் முதல் வாரத்தில் இதுவரை 16 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தலுக்காகவும் மற்றும் இந்திய வான்வெளியில் உளவு பணி மேற்கொள்வதற்காகவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணிப்பு பணியை தொடர்ந்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu