முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.300

September 2, 2023

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.300-ஐ தாண்டியுள்ளது. சமீப காலமாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அவ்வப்போது, உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றன. ஐநா அமைப்பும் நிதி உதவி வழங்கி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 280-க்கு மேல் விற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக […]

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.300-ஐ தாண்டியுள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அவ்வப்போது, உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றன. ஐநா அமைப்பும் நிதி உதவி வழங்கி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 280-க்கு மேல் விற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.300-ஐ தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள காபந்து அரசு பெட்ரோல் லிட்டருக்கு 14.91 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.36-க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 18.44 உயர்த்தப்பட்டு 311.84 விற்கிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எரிபொருளின் விலையை லிட்டருக்கு ரூ.20 வரை அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் இரண்டே வாரங்களில் மேலும் விலையை உயர்த்தி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கராச்சி உட்பட பிற இடங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu