ஜெர்மனியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை சேதப்படுத்திய ஆப்கானிஸ்தியர்கள்

July 22, 2024

ஜெர்மனியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ஆப்கானிஸ்தியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு கட்ட பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் தூதரகத்துக்குள் நுழைந்ததை கட்டுப்படுத்த தவறியதாக ஜெர்மனி மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்க்ஃபோர்ட் பகுதியில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த சனிக்கிழமை மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் […]

ஜெர்மனியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ஆப்கானிஸ்தியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு கட்ட பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் தூதரகத்துக்குள் நுழைந்ததை கட்டுப்படுத்த தவறியதாக ஜெர்மனி மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள பிராங்க்ஃபோர்ட் பகுதியில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த சனிக்கிழமை மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பாகிஸ்தான் தேசிய கொடியை கீழிறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய கொடியை அவமதிப்பு செய்ததாக பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu