பல நன்மைகள் தரும் பதஞ்சலி வழிபாடு

பதஞ்சலி சித்தர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மொத்தம் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாட்கள் என்றும், பதஞ்சலி சித்தரின் குரு சிவனின் வாகனம் நந்தி. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் சொல்வார்கள். புராணங்களின் படி அவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர்முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் […]

பதஞ்சலி சித்தர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மொத்தம் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாட்கள் என்றும், பதஞ்சலி சித்தரின் குரு சிவனின் வாகனம் நந்தி. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் சொல்வார்கள். புராணங்களின் படி அவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர்முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று மாறியதாய் ஒரு தகவலும் இருக்கிறது. இவரின் அவதார காரணம் குறித்து இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் படுத்திருந்த விஷ்ணுவின் திடீர் எடை தாங்க முடியாமல் தவித்தார் ஆதிசேஷன். ஆனால் விஷ்ணுவோ புன்னகை செய்து கொண்டிருந்தார். தன் மனதுள்ளே தன் மூச்சுக்காற்று உள்ளே செல்கையிலும், வெளியே வருகையிலும் நடைபெற்ற சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தப்பட்டு கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் கேட்டார்.

மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் கோவிலுக்கு சென்று பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் ஒரு தகவல் உள்ளது.

இவருடைய சம காலத்தவர் என அழைக்கப்படும் புஷ்ய மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அதனால் பதஞ்சலியின் காலமும் கி.மு. என்று இருக்கவே வாய்ப்புகள் அதிகமுள்ளது என்றும் சொல்கிறார்கள். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாலும், பதஞ்சலி சித்தர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்றும் கூட ஒரு தகவல் உள்ளது. “பதஞ்சலி அவர்களை பற்றி திருமூலர் என்ன சொல்லியுள்ளார் என்றால் பதஞ்சலி அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் அவர்களுக்கு பிறந்தது. இந்த ரிஷித் தம்பதியருக்கு பிறந்த அந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலைக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் பதஞ்சலி பிறந்ததாகவும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைத்தார்கள் என்றும் திருமூலர் எழுதியுள்ளார்.

ஒருமுறை தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து அவர் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தன்னுடைய சீடர்களுக்கு நேருக்கு நேராய் உபதேசிக்க விரும்பினார் பதஞ்சலி ஆனால் அதற்கு கௌடபாதர் என்ற சீடர் மட்டும் சித்தர் ஏற்கனவே சொன்ன வேறு வேலைக்காக வெளியே சென்றுவிடுகிறார். பதஞ்சலி முனிவர் தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டு. திரையின் பின் அமர்ந்து இருந்து தன் உபதேசத்தை ஆரம்பித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்தர்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து வந்த வெண்கல குரல் அற்புத கருத்துகளால் பிரமித்து போய் அமரந்திருந்த சீடர்களுக்கு , இந்த கம்பீரமான குரலுக்கு சொந்தமான குருநாதரின் திருமுகத்தை திரை விலக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. திரையை பிடித்து அகற்ற அடுத்த நொடி ஆதிஷேடரின் கடும் விஷக் காற்று தீண்டி , அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாகிவிட்டனர்.

பதஞ்சலி பயந்தது நடந்து விட்டது. அப்போது கௌடபாதர் வருவதை கண்டு சித்தர் உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நண்பர்கள் அனைவரும் சாம்பலாகியதை கண்டு வருந்தினார். பொறுமையை இழந்ததினால் வந்த விணை. ” கௌடபாதர் , நீ மட்டும்தான் என் சீடர் என்பது விதி என்பதால் உனக்கு சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் ” என்றார் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடினால் சமாதிநிலை உண்டாகும் என்றார். படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி சித்தர். அதை கேட்டு அப்படியே பின்பற்றிய கௌடபாதரும் யோக சூத்திரத்தின் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். நாட்டிய சாஸ்திரம், யோகக் கலை மஹா பாஷ்யம் இவை அனைத்தையும் எழுதியது பதஞ்சலி சித்தர் தான் என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள். இப்படி இந்த பூமிக்கு பல நன்மைகள் செய்து மறைந்த பதஞ்சலி சித்தர் சமாதி 12 ஜோதிர்லிங்க தளங்களின் ஒன்றான ராமேஸ்வரத்தில் தான் உள்ளது என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu