அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற பாலஸ்தீனம் வேண்டுகோள்

October 21, 2023

வடக்கு காசாவில் உள்ள அல் குட்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் காசாவில் உள்ள மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 300 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள அல் குட்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட […]

வடக்கு காசாவில் உள்ள அல் குட்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் காசாவில் உள்ள மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 300 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள அல் குட்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். அதோடு போருக்கு பயந்து சுமார் 12,000 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு படை ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பயங்கரவாதிகளிடையே உரையாடல் நடைபெறுவது போல் உள்ளது. அதில் மருத்துவமனை மீது ஏவப்பட்ட ராக்கெட் அவர்களுடைய குழுவினருடையது என்று அவர்கள் கூறுவது போல் உள்ளது. இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ராக்கெட் ஏவுகணை வீசியதாகவும், அது தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu