இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன முக்கிய உறுப்பினர் பலி - பதற்றம் அதிகரிப்பு

May 3, 2023

பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினரான காதர் அட்னான், இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறையில் அவர் உயிரிழந்துள்ளதால், இஸ்ரேல் - பாலஸ்தீன பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனியர்கள் மீது வன்முறை தாக்குதலை அதிகரித்துள்ளது. மேலும், எந்தவித காரணங்களும் இன்றி, பாலஸ்தீனியர்கள் பலர், ‘அரசியல் கைதி’களாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், உண்ணாவிரதம் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், […]

பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினரான காதர் அட்னான், இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறையில் அவர் உயிரிழந்துள்ளதால், இஸ்ரேல் - பாலஸ்தீன பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனியர்கள் மீது வன்முறை தாக்குதலை அதிகரித்துள்ளது. மேலும், எந்தவித காரணங்களும் இன்றி, பாலஸ்தீனியர்கள் பலர், ‘அரசியல் கைதி’களாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், உண்ணாவிரதம் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3 மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த காதர், நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பாலஸ்தீனியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, பாலஸ்தீன ஆயுதக் குழுவினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காதர் உயிரிழந்த செய்தி வெளியானதில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu