அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைத்து, பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கடல் வழி போக்குவரத்தை மிகவும் எளிமையாக்குகிறது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில், பனாமா நாட்டில் 30% குறைவான மழை பெய்துள்ளது. இதனால், கடும் வறட்சி ஏற்பட்டு, பனாமா கால்வாய் நீர் அளவு குறைந்துள்ளது. இதனால், சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பனாமா கால்வாயில், கடல் மட்டத்திலிருந்து கப்பல்கள் உயர்வான மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பிறகு, சரக்குகள் கையாளப்படும். இந்த நிலையில், வறட்சி காரணமாக, கப்பல்களை கடல் மட்டத்திலிருந்து உயர்த்தும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சரக்கு கப்பல்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் வரை, ஒரு நாளைக்கு 38 கப்பல்கள் பனாமா கால்வாய் வழியில் சென்று சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது. எனவே, சரக்கு போக்குவரத்தில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில், 5% வர்த்தகத்தை கையாளும் பனாமா கால்வாய் முடங்கியுள்ளது, விநியோகச் சங்கிலியை கடுமையாக பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக, உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.