தமிழகத்தில் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வட மாநில மக்கள் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானது பானிபூரி. இது தற்போது அனைத்து இடங்களிலும் மக்கள் விரும்பி உண்டு வருகின்றனர். இந்நிலையில் சாலையோரம் உள்ள பானிபூரிகள் தரம் இல்லாமல் இருப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் பானிபூரி யில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்