பின்லாந்தில் நடைபெற்று வரும் பாவோ நுர்மி போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்று வரும் பாவோ நுர்மி போட்டியில் இந்திய வீரர் நீர்ஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் அசத்தலாக விளையாடியுள்ளார். அதில் 85.97 மீட்டர்கள் ஈட்டி எறிந்து அவர் தங்கப்பதக்கம் வென்று உள்ளார். இதன் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர் எறிந்தார். பிறகு இரண்டாம் சுற்றில் பின்லாந்து வீரர் ஆலிவர் ஹல்லாண்டர் 83.96 மீட்டர் க்கு ஈட்டி எறிந்து முன்னிலை ஆனார். அடுத்த நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் நீரஜ் சோப்ரா 85.97 மீட்டர்கள் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்