மூன்று டெர்மினல்களுடன் கட்டப்படுகிறது பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்ப கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் 32,704 கோடி செலவில் பிரம்மாண்டமாக சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு கிராம மக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் புதிய விமான நிலையத்திற்கு நிலங்களை […]

பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்ப கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் 32,704 கோடி செலவில் பிரம்மாண்டமாக சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு கிராம மக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் புதிய விமான நிலையத்திற்கு நிலங்களை கையக படுத்தும் ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பரந்தூர் விமான நிலையம் ஆனது பிரம்மாண்டமாக மூன்று முனையங்களுடன் கட்டப்பட உள்ளன. இந்த பணிகள் நான்கு கட்டமாக நடைபெற இருக்கின்றன. இதில் முதல் கட்ட பணி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் கட்டுமான பணி 2046 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu