பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற இந்திய தடகள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பாரீசில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆவர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம் பெற்றுள்ளனர். அதில் நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது